தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டுக்காக CSSL உடன் இணையும் Huawei

உலகின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ICT  வழங்குனரான Huawei, இலங்கை கணினிச் சங்கத்தினால் (CSSL) ஒழுங்கு செய்யப்படும், இலங்கையின் முதன்மையான ICT  நிகழ்வாக விளங்கும் தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் (NITC)  பங்காளராக இணைந்து கொள்வதற்கு  முன் வந்துள்ளது.

இவ் வருடம் தொடர்ச்சியாக 38வது முறையாகவும் CSSL, தேசிய தகவல் தொழிநுட்ப மாநாட்டை (NITC) ஒழுங்கு செய்கின்றது. இம்முறை “பேண்தகு டிஜிட்டல் இலங்கையை நோக்கி” எனும் தொனிப்பொருளில், சிறந்த பெறுமதியை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதோடு, பல வெளிநாட்டு அதிதிகளையும், பேச்சாளர்களையும் கவர்வதன் மூலம் இலங்கைக்கு பெறுமதி சேர்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய தகவல் தொழிநுட்ப மாநாடு (NITC), தனியார் மற்றும் பொதுத் துறையிலுள்ள ICT தொடர்பிலான முக்கிய தீர்மானம் மேற்கொள்வோரை ஒருங்கிணைக்கும் முதற்தர ICT நிகழ்வாகும். இது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் (ICT)  நவீன போக்கு தொடர்பில் கலந்துரையாடவும், அறிவினைப் பகிர்ந்து கொள்ளவும், 60க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு முக்கிய பேச்சாளர்களுடனும், 1000க்கும் மேற்பட்ட ICT தொழில் வல்லுநர்களை ஒன்றிணைக்கின்றது.

“உலகளாவிய ICT ஜாம்பவானான Huawei ஆனது, இலங்கையின் முதன்மையான ICT நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகின்ற தேசிய தகவல் தொழிநுட்ப மாநாட்டுக்காக (NITC) கரங்கோர்ப்பதற்கு அடியெடுத்து வைத்துள்ளதில், ICT தொழில் வல்லுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, தேசத்தின் உயர் சங்கம் என்ற வகையில் நாம் மிக மகிழ்ச்சியடைகின்றோம்,” என CSSLன் தலைவர் பிரபாத் எஸ். விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

“Huawei  பல ஆண்டுகளாக இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு Huawei உருவாக்கிய மற்றும் கொண்டு வந்த அண்மைய புதுமையான அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான மற்றொரு முன்னேற்றப் படியாக இது இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்த அவர்,  இந்த நகர்வானது டிஜிட்டல் இலங்கையின் பேண்தகைமைக்கு வழிவகுக்கும் புதிய வழிகள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்வதற்கான இயலுமையை ICT  பங்காளர்களுக்கு வழங்கும் என்றார்.

“இது இலங்கையின் ICT திறன்கள், திறமை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் Huawei  நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் உறுதி செய்யும். பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அடித்தளத்தை இடுவதற்கு இலங்கை பல முயற்சிகளை அண்மைக்காலமாக மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது இலங்கை மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளதுடன், உலகில் நிலவும் தொற்றுநோய் நிலையையும் மீறி மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பெருமளவில் பங்களிப்பு செய்கின்றது,” என்று Huawei Sri Lanka இன் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி தெரிவித்தார்.

“தேசிய ICT மாநாடு போன்ற முயற்சிகள் மூலம் இந்த அழகான நாட்டின் ஐ.சி.டி தொழிற்துறையின் வளர்ச்சிக்கான எங்கள் புத்தாக்கங்களையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வோம். CSSL மற்றும் ICTA போன்ற ICT தொழிற்துறை பங்காளர்களுடன் இணைந்து, இளம் திறமையாளர்களை போட்டித்தன்மையுடன் செயல்பட வைக்க அண்மையில் நாம் உதவியதுடன், இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தின் பிரதான வழிநடத்துனராக நாம் தொடர்ந்து இருப்போம், எப்போதும் ‘இலங்கையில், இலங்கைக்காகவே’ என்று யி சுட்டிக்காட்டினார்.

CSSL, தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டை (NITC) வருடாந்த நிகழ்வாக நடாத்துகின்றது.

இலங்கையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்புகள் தொழிநுட்ப (ICT) தொழில்சார் நிபுணர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தனியான அங்கமான, 1976 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கணினிச் சங்கம் (CSSL), ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிரிட்ஜில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற சியோல் ஒப்பந்த கூட்டத்தில்  தற்காலிக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. தென் கிழக்காசிய பிராந்திய கணினி கூட்டுச் சம்மேளனம் (SEARCC) மற்றும் தகவல் மேம்படுத்தலுக்கான சர்வதேச சம்மேளனம் (IFIP) ஆகியவற்றின் உறுப்பினராகவும் CSSL உள்ளது.

Huawei இலங்கையில் 1998 முதல் செயல்பட்டு வருவதுடன், உள்நாட்டின் பிரதான தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுடன் விரிவான மற்றும் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இலங்கை மனித மூலதனம் நிறைந்த நாடென்பதுடன், பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் நிறுவனங்களின் திறன்கள், செயல் வல்லமைக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க உயர் மட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், இளைஞர் திறமைகளை தொடர்ந்து உருவாக்க Huawei அர்ப்பணிப்புடன் உள்ளது.

இலங்கையின் வளர்ச்சிக்காக ICTதிறமைகளை வளர்ப்பதற்கும், டிஜிட்டல் திறன்களின் அபிவிருத்திக்கு உள்நாட்டு தொழில்நுட்ப சூழல் கட்டமைப்பு மற்றும் பங்காளர்களுடனான நீண்டகால ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் Huawei Sri Lanka இந்த ஆண்டு புதிய முயற்சிகளில் இறங்கியது. இலங்கை தனது தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்ய உதவும் முகமாக Huawei நிறுவனத்தின் நீண்ட கால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான ‘TECH4ALL’ இன் ஓர் அங்கமாக படித்த மற்றும் திறமையான இளைஞர்கள் ICT களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ICT துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும் இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) அடங்கும். இந்த முயற்சிகள் இலங்கை மாணவர்களுக்கு எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தயாராக இருப்பதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையின் எதிர்கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பல ஆண்டுகளாக Huawei, இலங்கையில் ICT திறன் கட்டமைப்பின் அபிவிருத்தியை 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Huawei Seeds எதிர்காலத் திட்டம், திறமையான இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்குதல் மற்றும் ICT திறன் தொழில்துறை பயிற்சி போன்ற செயற்திட்டங்களின் மூலம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

Huawei தொடர்பில்

1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Huawei தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநராகும். முழுமையாக இணைக்கப்பட்ட, அறிவார்ந்த உலகத்திற்காக ஒவ்வொரு நபருக்கும், வீடு மற்றும் நிறுவனத்துக்கும் டிஜிட்டலைக் கொண்டு வருவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். Huawei இன் தயாரிப்புகளின் வரிசை, தீர்வுகள் மற்றும் சேவைகள் போட்டித்தன்மை மிக்கதுடன் பாதுகாப்பானது. தொழில்நுட்ப சூழல் கட்டமைப்பு பங்காளர்களுடன் திறந்த ஒத்துழைப்பு மூலம், நாங்கள் எமது வாடிக்கையாளர்களுக்கு நீடித்த பெறுமதியை உருவாக்குகிறோம், மக்களை வலுப்படுத்துவதற்கும், வீட்டு வாழ்க்கையை வளப்படுத்துவதற்கும், அனைத்து வடிவங்கள் மற்றும் அளவிலான அமைப்புகளில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் உழைக்கிறோம். Huawei இல், புத்தாக்கமானது வாடிக்கையாளருக்கு முதலிடம் அளிக்கிறது. நாம் அடிப்படை ஆராய்ச்சிகளில் பெரிதும் முதலீடு செய்வதோடு, உலகை முன்னோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களில் கவனம் செலுத்துகின்றோம். நாம் சுமார் 194,000 ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன், மேலும் 170 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் செயல்படுவதோடு, உலகெங்கிலும் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவையை வழங்குகின்றோம். 1987 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Huawei அதன் ஊழியர்களுக்கு முழுவதும் சொந்தமான தனியார் நிறுவனமாகும். தயவு செய்து ஒன்லைனுக்கு விஜயம் செய்யுங்கள்: https://www.huawei.com/en/

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *