Tamil (Page 12)

ஜனசக்தி லைஃப், 2025 இரண்டாம் காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர்களில் ஒன்று எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. முதல் காலாண்டில் நிறுவனம் பதிவு செய்திருந்த உறுதியான போக்கினை மேலும் தொடர்ந்து, வளர்ச்சிப் பாதையில் செயலாற்றி, இலாபகரத்தன்மை மற்றும் வியாபார விரிவாக்கம் ஆகியவற்றில் தொழிற்துறையின் நியமங்களை கடந்திருந்தது. தனது தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையை பேணி, ஜனசக்திContinue Reading

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், அண்மையில் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்பதிலிருந்து, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த ஜனசக்தி பைனான்ஸ், 2025 ஜுன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டு பகுதியில் ரூ. 60 மில்லியனை வரிக்கு பிந்திய தேறிய இலாபமாக (NPAT) பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தேறிய செயற்பாட்டு வருமானம் ரூ. 672 மில்லியனாக அதிகரித்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35%Continue Reading

–  ‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக, கொழும்பு பொது நூலகத்தில் இன்று ஆரம்பமாகியது. இவ் அருங்காட்சியகம் 2019ல் ஆரம்பித்தது தொடக்கம் 7 மாகாணங்களில், 10 மாவட்டங்களில், யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், பதுளை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் காலி உள்ளடங்களாக 11 நகரங்களுக்குப் பயணித்துள்ளது. 52,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் பின்னூட்டலுடன் அருங்காட்சியகமானது மீள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், புத்தம் புதிய ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக மீள்Continue Reading

இலங்கையில் மிகவும் விரும்பப்படும், மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான பராமரிப்பு வர்த்தகநாமமாக விளங்கும் பேபி செரமி (Baby Cheramy), இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் (Sri Lanka College of Pediatricians) இணைந்து 27ஆவது வருடாந்த 2025 விஞ்ஞான மாநாட்டில் பெருமையுடன் பங்கேற்று, குழந்தைகளுக்கான பராமரிப்புத் துறையில் தனது தலைமைத்துவத்தையும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகவாழ்வு தொடர்பான தமது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த மாநாடானது, நாடு முழுவதிலிருந்தும்Continue Reading

இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்தContinue Reading

85 வருட காலப்பகுதிக்கு மேலாக இந்நாட்டின் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடியாகத் திகழும் DIMO நிறுவனம், இந்நாட்டின் நம்பிக்கையை வென்ற அரச வங்கியான இலங்கை வங்கியுடன் (BoC) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, Mercedes-Benz, Jeep மற்றும் Tata வாகங்களுக்கு புதிய லீசிங் தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த கைகோர்ப்பினூடாக, BoC இனால் DIMO நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் Mercedes-Benz, Jeep மற்றும் Tata வாகனங்களுக்கு குறைந்த வட்டி வீதங்களில் லீசிங்Continue Reading

இலங்கையின் கட்டுமானத் துறையில் முன்னணி வர்த்தகநாமமான Swisstek, மறைவான விலை அதிகரிப்பு மற்றும் அதிக தள்ளுபடிகள் நிறைந்த சந்தையில், நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையை நோக்கி நுகர்வோர் முன்னேறிச் செல்வதற்கான பாதையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் HARDWARE வணிக நடவடிக்கையில், தயாரிப்பு பொதியிலுள்ள உச்சபட்ச சில்லறை விலையை (MRP) சூட்சுமமாக உயர்த்துவதன் மூலம், பாரிய தள்ளுபடிகளை வழங்குவதாக காண்பித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதை காணலாம். இத்தகைய தவறான நடைமுறைகள் இடம்பெற்று வரும் சந்தையில்,Continue Reading

இலங்கையின் முன்னணி நீர்ப்பம்பி உற்பத்தியாளரும், புத்தாக்கமான நீர் முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகவும் விளங்கும் Agromax நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்கான தனது வருடாந்த விற்பனை மாநாட்டை வாஸ்கடுவவில் உள்ள Citrus Hotel கோலாகலமாக கொண்டாடியது. Agromax நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர், முகாமைத்துவ உறுப்பினர்கள், விற்பனைக் குழு, உற்பத்தி மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள், பின்புல அலுவலக ஊழியர்கள் மற்றும் லொஜிஸ்டிக் குழுவினர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில், இலங்கையில்Continue Reading

நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் (JURE) கீழ், சட்ட விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் நீதி கிடைக்கும் வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஆரம்பம் ம்படுத்துவதற்கும் நீதி கிடைக்கும் வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஆரம்பம் 2025 ஓகஸ்ட் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் பதுளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்Continue Reading

இலங்கையில் Tata வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக செயற்படும், முன்னணி பல்துறை வணிகக் குழுமமான DIMO நிறுவனம், அண்மையில் யாழ்ப்பாணத்தில் DIMO Mega Fiesta 2025 நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. ஜூன் 24 முதல் 28 வரையில் இடம்பெற்ற இந்த Tata வர்த்தக வாகன சேவை முகாமானது, வட மாகாணத்தின் போக்குவரத்து நடவடிக்கையை வலுப்படுத்தும் DIMO நிறுவனத்தின் நோக்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுகிறது. இந்நிகழ்வில், Tata வர்த்தக வாகனங்களுக்கு இலவச பரிசோதனைகள்Continue Reading