Tamil (Page 60)

இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடியானது நாட்டின் பொருளாதாரத்தில் பால் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளை கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதாரத்திற்கு உதவும் மிகப் பெரும் ஆற்றலைக் கொண்ட ஒரு தொழில்துறையான பால் தொழில்துறையானது, நாட்டின் மிக முக்கியமான தொழில்துறைகளில் ஒன்றாகும். ஆயினும், அதிகரித்து வரும் செலவீனங்கள், தீவனங்கள் மற்றும் விற்றமின்களின் பற்றாக்குறை, எரிபொருள் மற்றும் உரம், சோளத்தை இறக்குமதி செய்வதில் உள்ள சிரமம் ஆகியன, இத்தொழில்துறையின் நிலைப்பை பெரிதும் பாதித்துள்ளன.Continue Reading

முற்றுமுழுதாக இலங்கை நாமமான Anton, 60 ஆண்டுகளுக்கும் மேலாக  வீட்டுப் பாவனை தீர்வுகளை உற்பத்தி செய்து வருவதுடன், அதன் தனித்துவமான வடிவமைப்புகள், நிலையான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரம் ஆகியவற்றை பேணியவாறு உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்து வருகின்றது. தெற்காசியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான Daraz.lk இல் தனது பிரத்தியேக கூடத்தை திறந்துள்ளதன் மூலம், ஒன்லைன் சந்தைப்படுத்தல்Continue Reading

இலங்கையின் முதல் தர குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான Baby Cheramy, அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பராமரிப்பு உற்பத்திகளை வழங்கி, 60 வருடங்களைக் கொண்டாடுகிறது. இந்த வர்த்தகநாமம், எப்போதும் உயர் தரம் மற்றும் உங்கள் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துகிறது. பேபி செரமி, தனது நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளுடன் நெருக்கமான இணைப்பைக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அண்மையில் ‘நில்Continue Reading

Huawei மற்றும் ASEAN Foundation இணைந்து ஒழுங்கு செய்துள்ள Huawei APAC Digital Innovation Congress (Huawei APAC டிஜிட்டல் புத்தாக்க மாநாடு), டிஜிட்டல் புத்தாக்கங்களின் எதிர்காலம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆராயும் வகையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 10 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,500 இற்கும் மேற்பட்ட அரசாங்க அதிகாரிகள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கூட்டாளர்கள், ஆய்வாளர்களின் பங்கேற்புடன் அண்மையில் இடம்பெற்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நட்பத்தில் (ICT) இடம்பெற்றுContinue Reading

2022ஆம் ஆண்டில் உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 6.56 பில்லியனை கடந்துள்ளதுடன், இது உலக சனத்தொகையில் 83.7% இற்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கு வழிவகுத்துள்ளது. தொலைபேசிகள் எமது வாழ்க்கை முறையை வியக்கத்தக்க வழிகளில் முற்றிலும் மாற்றியுள்ளன. உறுதியான இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வலைப்பின்னலை உருவாக்குவதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையை தடையின்றி ஒத்திசைவாக பேணுகின்றன. ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம் ஒரு பார்வை தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல் ஆகியContinue Reading

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டின் முதன்மையான நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி, Dahua இன் அதிநவீன கண்காணிப்புத் தொகுதி  தயாரிப்பு வரிசை மற்றும் ஸ்மார்ட் தீர்வுகளைக் கொண்டுள்ள முதன்முதல் முழுமையான, தனித்துவமான Dahua காட்சியறையை அண்மையில் திறந்து வைத்துள்ளது. புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள தனித்துவமான காட்சியறையின் வணிகக் கூட்டாளராக Real Vision Pvt (Ltd) நிறுவனம் சிங்கருடன் கைகோர்த்துள்ளது. இல. 120, காலி வீதி, கொழும்புContinue Reading

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, உலகின் மிகப்பெரிய காப்புறுதி மற்றும் நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான Allianz உடன் இணைந்து, DIMO வின் TATA வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன மோட்டார் வாகன காப்புறுதி மற்றும் இழப்பீட்டு தீர்வுத் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 5 வருடங்களுக்குள் TATA வாகனங்களுக்கு, விபத்தின் போதான பழுதுபார்த்தலின் போது ஏற்படும் செலவைக் குறைக்க, உரிமையாளர்Continue Reading

அமானா தகாஃபுல் ஆயுள் காப்புறுதியானது (Amana Takaful Life Insurance- ATLI), 2021 ஆம் ஆண்டில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சவாலான காலகட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருவதை காண்பிக்கிறது. 2021ஆம் ஆண்டில், அமானா தகாஃபுல் லைஃப் அதன் Gross Written Premium Contribution (GWP) யினை உயர்வடையச் செய்துள்ளதுடன், நிறுவனத்தின் உறுதியான 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயல்திறனானது, காலாண்டிலிருந்துContinue Reading

சர்வதேச தரத்தில் அமைந்த உள்ளூர் பால் உற்பத்தி வர்த்தக நாமமும், வாடிக்கையாளர்களுக்கு தரமான புத்தம் புதிய பாலை வழங்குவதற்கான உறுதிமொழியை கொண்டுள்ள பெல்வத்தை (Pelwatte) நிறுவனம், க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்களை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. நிலைபேறான முறைகள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்தும், பெல்வத்தையின் பெருநிறுவன தத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இக்கருத்தரங்குகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பமாகி 2022 ஏப்ரல் மாதத்தின் முதல்Continue Reading

2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் 75,909 புற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 57% ஆனோர் பெண்களாவர். இவ்வாறு நோய்வாய்ப்படுபவர்கள் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு, இதன் பிரதான பக்க விளைவாக ‘முடி உதிர்தல்’ பிரச்சினை காணப்படுகின்றது. இந்நிலைமையை சந்திக்கும் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை உணர்ந்து, ‘முடி உதிர்தல்’ காரணமான சமூக பிரச்சினைகளை களைவதற்காக, இலங்கையின் முன்னணிContinue Reading